தலைவா ரிலீஸ் ஆகப்போகிறது. தலை பிரசவம் போல இதை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார் விஜய். பொதுவாகவே தனது போன் அடித்தால் கூட தன் உதவியாளர்களை விட்டு முதலில் பேச சொல்லிவிட்டு அதற்கப்புறம்தான் அவரே லைனுக்கு வருவார். (அது போன் செய்கிறவர்களின் தகுதியை பொறுத்து) அதே மாதிரிதான் தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லி விஜய் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையும் அமைந்திருக்கிறது.
அவரது பி.ஆர்.ஓ பி.டி.செல்வகுமார் விஜய் சொன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக எந்த ஒரு தலைவரோ, வி.ஐ.பியோ தனது அறிக்கையை அப்படியே டைப் செய்து, அல்லது எழுதி, (அல்லது பிறரை விட்டாவது எழுதி) அந்த அறிக்கையின் கீழே ஒரு கையெழுத்தும் போட்டு அனுப்பி வைப்பார்கள். இந்த நடைமுறைகள் எதையுமே கடைபிடிப்பதில்லை விஜய்.
விஜய் சொன்னதாக அவரது பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் பெயரிலேயேதான் அறிக்கைகள் வரும். இதை விஜய்யின் குரலாகவே எடுத்துக் கொண்டு பிரசுரிப்பார்கள் இங்கே. அப்படி இன்று வந்திருக்கும் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதென்ன?
"தலைவா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 9-ம்தேதி வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம், சில அச்சுறுத்தல்கள் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக, நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மீடியாக்களில் வந்த பல கட்டுக் கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தலைவா திரைப்படம் சுமுகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
பல வேலைகளுக்கு நடுவிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு பொறுமை காத்த ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தலைவா படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறியதாக அவரது பி.ஆர்.ஓ கூறியுள்ளார்.
அவரது பி.ஆர்.ஓ பி.டி.செல்வகுமார் விஜய் சொன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக எந்த ஒரு தலைவரோ, வி.ஐ.பியோ தனது அறிக்கையை அப்படியே டைப் செய்து, அல்லது எழுதி, (அல்லது பிறரை விட்டாவது எழுதி) அந்த அறிக்கையின் கீழே ஒரு கையெழுத்தும் போட்டு அனுப்பி வைப்பார்கள். இந்த நடைமுறைகள் எதையுமே கடைபிடிப்பதில்லை விஜய்.
விஜய் சொன்னதாக அவரது பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் பெயரிலேயேதான் அறிக்கைகள் வரும். இதை விஜய்யின் குரலாகவே எடுத்துக் கொண்டு பிரசுரிப்பார்கள் இங்கே. அப்படி இன்று வந்திருக்கும் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதென்ன?
"தலைவா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 9-ம்தேதி வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம், சில அச்சுறுத்தல்கள் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக, நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மீடியாக்களில் வந்த பல கட்டுக் கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தலைவா திரைப்படம் சுமுகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
பல வேலைகளுக்கு நடுவிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு பொறுமை காத்த ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தலைவா படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறியதாக அவரது பி.ஆர்.ஓ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment