Breaking News

Thursday, 13 September 2012

தமிழ்ப்பட கதாநாயகி விபசார வழக்கில் கைது?????


கடந்த ஆண்டு வெளிவந்த, வாடா செல்லம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிகை கரோலின் நடித்துள்ளார்.இவர் மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து, விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வாடிக்கையாளர் போர்வையில் ஒரு போலீஸ்காரர், நடிகை கரோலின் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நடிகையைக் கண்டு பேசியபோது, அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது மானேஜரும், திரைப்பட ஸ்டூடியோ ஒன்றின் அதிபருமான எம்.ராஜ்குமாரும் கைது ஆனார்கள்.
நடிகை கரோலின் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளதோடு மட்டுமின்றி மாடல் அழகியாகவும் இருந்து வந்துள்ளார். இவர் பிரபல வைரம் மற்றும் ஆடை நிறுவனங்களின் விளம்பரப்படங்களில் தோன்றியும் நடித்துள்ளார்.
நடிகை கரோலின், அவரது மானேஜர் ராஜ்குமார் ஆகியோர் மீது புனே விமன் நகர் போலீசார் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதை சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே உறுதி செய்தார்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates